உலகம்

டீப்சீக் செயலிக்கு தடை விதித்த மற்றுமொரு நாடு

சீனாவை(China) சேர்ந்த செற்கை நுண்ணறிவு(AI) செயலியான டீப்சீக்-ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. டீப்சீக்(Deepseek) செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் சீனா டீப்சீக் எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. டீப்சீக்-இன் ஆர்1 செட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் பயனர்களை குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியுள்ளது. டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில், பதில் அளித்த சீன AI நிறுவனமான டீப்சீக், “உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது” என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது “தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்” என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் கூறியது. பதிவிறக்கம் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ‘AI Chatbot’ இன்னும் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *