சினிமா

தெறி, புதுப்பேட்டை பட நடிகர் மரணம்.. மோசமான இறுதி நாட்கள்

புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் ஜெயசீலன். 40 வயதாகும் அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருக்கிறார். தெறி படத்தில் குழந்தைகள் ரைம்ஸ் தப்பு தப்பாக பாடி வைரலானவர் அவர்.

ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்த அவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார். மஞ்சள் காமாலை நோயால் படுத்த படுக்கையாக இருந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என உறவினர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *