இந்திய இராஜதந்திர நகர்வுகளில் இம்முறையும் இலங்கைக்கு பாரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றிய நிர்மலா சீத்தாராமன் விடயத்தை முன்மொழிந்துள்ளார். இலங்கைக்கான உதவியில் எந்த மாற்றமும் இல்லை என நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான இந்திய வரவு செலவு திட்டதில் முந்தையதைப் போலவே 300 கோடி இந்திய ரூபா இலங்கையுடனான பொருளாதார நட்புறவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டமையை இங்கு அவர் நினைவுகூர்ந்துள்ளார். இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்மையும் தமது நாடு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.