பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.பார்வதி அவ்வப்போது பேட்டிகளில் ஓப்பனாக பேசும் விஷயங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது.
பேட்டி ஒன்றில் நடிகை பார்வதி அவருக்கு காதலில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் டேட்டிங் ஆப் பயன்படுத்துவது குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ” நான் டேட்டிங் ஆப்பில் அக்கவுன்ட் வைத்துள்ளேன். அவ்வப்போது அதில் நல்ல பசங்கள் உள்ளார்களா என்று பார்ப்பேன். எனக்கு நேரில் பார்த்து பழகி வரும் காதல் மீது தான் நம்பிக்கை.
முன்பு ஒருவரை காதலித்தேன். காதலில் எனக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என் முன் கோபம் தான். காரணமாக காதல் உடைந்து விட்டது. இனிமே காதலிக்கும் முன் பலமுறை யோசித்து காதலில் விழ முடிவெடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.