இலங்கை

இலங்கை பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக குழந்தைகளின் உடலின் உட்புறத்திற்கும், சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இவ்வாறான காலப்பகுதியில் அதிகப்படியான வியர்வை உடலில் இருந்து வெளியேறுவதால், மஞ்சள் காமாலை, தொழுநோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய்களிலிருந்து பாதுகாக்க தினமும் குளிக்க வேண்டும் என வைத்தியர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளை காலையில் 20 நிமிடங்களும், மாலையில் 20 நிமிடங்களும் தண்ணீரில் வைத்திருக்கலாம். வெப்பமான பருவத்தில் வயிற்றுப்போக்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம். மற்றும் காய்ச்சல், வாந்தி, வாய்வு அறிகுறிகள் காணப்படும்.

வெப்பமான வானிலை சிறு குழந்தைகளுக்கு கடினமாக இருக்கும், அவர்களிடம் தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, அதிகப்படியான தூக்கம், வாந்தி, வழக்கத்தை விட அதிக சோர்வாக உணர்தல், நீரிழப்பு போன்றவற்றைக் காணலாம். வழக்கத்தை விட சுத்தமான தண்ணீரைக் குடிக்குமாறும், தினமும் குளிக்குமாறும், எளிய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *