இலங்கை

அநுர உலங்குவானூர்தியை பயன்படுத்த வலியுறுத்து!

வடக்கிற்கு வீதிகள் வழியாக பயணம் செய்யும் போது, அநுரகுமார திசாநாயக்க முக்கியமான முடிவுகளை எடுக்க செலவிடக்கூடிய மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க  (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara Dissanayake) உலங்குவானூர்திகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலங்குவானூர்திகளின் மூலம் பயணம் செய்தால் ஜனாதிபதி முக்கியமான முடிவுகளை எடுக்க அதிக நேரம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இல்லத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மூடப்பட்டுள்ளதாகவும், மூடிவைத்திருப்பதன் மூலம் நாடு என்ன நன்மையை அனுபவிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *