இலங்கை

கிழக்கில் தீவிரவாதக் குழு : விசாரணைகள்

கிழக்கு மாகாணத்தின் கல்முனைப் பகுதியில் இயங்கும் தீவிரவாத அமைப்பு குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  (04) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்ட குழு பற்றிய தகவல்கள் உள்ளன. உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் அது தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் உரையாற்றியதாக குறிப்பிட்டார்.  பாதுகாப்புப் படையினர் தற்போது விழிப்புடன் இருப்பதாகவும், நிலைமையை தீவிரமாக மதிப்பிட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *