இலங்கை

யாழில் அத்துமீறி பேசிய யூரியூபர்….! சட்ட நடவடிக்கை

யாழ்.(Jaffna) – இளவாலை (Ilavalai)காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள யூடியூப்பர் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா நேற்றைய தினம் (09.03.2025) பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல்துறையினரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.

யூடியூப்பர் கிருஷ்ணா இளவாலை காவல் நிலைய சிறைக் கூடத்தில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தெரியவருகையில், குறித்த யூடியூப்பர் இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் அத்துமறி உள் நுழைந்து காணொளி பதிவு செய்துள்ளார். காணொளியில் பாவிக்கப்பட்ட சொற்பிரயோகங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது.

குறித்த யூடியூப்பர் நேற்றைய தினம் அந்த வீட்டுக்கு மீண்டும் செல்ல முயன்றவேளை பண்டத்தரிப்பு – சில்லையூர் மத்தி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருடன் இன்னும் மூன்றுபேர் என மொத்தமாக நால்வர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாக்கு மூலம், ஊர் இளைஞர்களின் வாக்குமூலத்தை பெற்றனர். அதன்பின்னர் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

வற்புறுத்தல், அத்துமீறி வீட்டினுள் உட்புகுதல், தகாத வார்த்தை பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நால்வரில் ஒருவர் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனம் ஒன்றில் பயிலுனராக பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (10.03.2025) நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *