சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை

#image_title

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) விலைச் சுட்டெண்கள் (05) பாரியளவில் சரிவடைந்துள்ளன. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் பாரியளவில் சரிவடைந்துள்ளது.

வர்த்தக நாள் நிறைவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகள் குறைந்து 16,456.10 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. S&P SL20 விலைச் சுட்டெண் 167.18 புள்ளிகள் குறைந்து 4,898.04 புள்ளிகளாக காணப்பட்டது.

வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.35 பில்லியன்களாக பதிவாகிவுள்ளதாக பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version