கனடாவுக்கு தலைவலியான ட்ரம்பின் முடிவு!

#image_title

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதாக குடியேறிய லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

அதில் இருந்து தப்பிக்க சிலர் கனடாவுக்குள் (Canada) நுழைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சில வாரங்களில் மட்டும் அமெரிக்க எல்லையில் இருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனடாவின் கடுங்குளிரைத் தாங்குவதற்கான சரியான ஆடைகள் கூட இல்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தனிநபர் தகவல்களை வெளியிட முடியாது என்று கனடா தெரிவித்துள்ளது.

பின்னணியில், அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேரிகள் கனடாவுக்குள் நுழையலாம் என்பதால் அதிகாரிகள் எல்லைகளில் பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version