கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) புதிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு நாடாளுமன்ற விவகார அமைச்சில் குடிவரவு குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் (07) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.