கெஹலிய வீட்டு முன்வைக்கப்பட்ட மலர்வளையம்

#image_title

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய வீட்டிற்கு முன்பு மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

வழக்கு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சியைப் பார்வையிட்ட பின்னர், வழக்கைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து பொலிஸாரால் தீர்மானிக்க முடியும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version