உலகம்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கெனடி படுகொலை இரகசிய ஆவணங்கள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கெனடி (John F Kennedy) படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் FBI, கிட்டத்தட்ட 2,400 இரகசிய ஆவணங்கள் கையிருப்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கெனடியின் படுகொலை தொடர்பான முக்கிய தகவல்கள் ஆவணங்களில் உள்ளதாக பணியகம் கூறுகிறது.

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக உத்தரவின்படி இந்த கொலை தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கெனடி படுகொலை தொடர்பான அரசு கோப்புகளை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நவம்பர் 22, 1963 அன்று டெக்சாஸின் டல்லாஸில் ஜே.எஃப்.கே படுகொலை செய்யப்பட்டதோடு, கொலைக்கான அதிகார பூர்வ விளக்கங்கள் குறித்து சந்தேகங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *