முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான மொத்த செலவினங்களை, நாடாளுமன்ற அமர்வின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), வெளியிட்டுள்ளார். விபரங்கள், பல ஆண்டுகளாக ஜனாதிபதிகளின் பயணங்களால் அரசுக்கு ஏற்பட்ட நிதிச் செலவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணச் செலவுகளின் விபரங்களை அவர் பட்டியலிட்டார்.
மகிந்த (2010–2014): 3,572 மில்லியன் ரூபாய்
மைத்ரிபால (2015–2019): 384 மில்லியன் ரூபாய்
கோட்டாபய (2020–2022): 126 மில்லியன் ரூபாய்
ரணில் (2023–2024): 533 மில்லியன் ரூபாய்
அநுர குமார திசாநாயக்க (செப்டம்பர் 2024–பெப்ரவரி 2025): 1.8 மில்லியன் ரூபாய் என்ற அளவில் செலவிடப்பட்டுள்ளது. விபரங்களின்படி, 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச செலவு 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களால், இலங்கை அரசுக்கு 1,144 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.