கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் குறித்த நீதிமன்ற தீர்ப்பு

#image_title

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (28) தீர்ப்பளித்துள்ளார். சம்பவம் தொடர்பான இரண்டு நாள் விசாரணையின் முடிவில் தலைமை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையையும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.தீர்ப்பை அறிவித்த தலைமை நீதவான், விசாரணையின் போது மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கொழும்பு தடயவியல் மருத்துவ அதிகாரி அலுவலகம் சமர்ப்பித்த பிரேத பரிசோதனை அறிக்கையை கருத்தில் கொண்டு முடிவை எட்டியதாகக் கூறியுள்ளார்.

இந்த விசாரணை கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, இறந்த சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவவின் சகோதரி தில்ருக்ஷி சமரரத்ன சாட்சியமளித்தார்.பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்ததுடன், சஞ்சீவ குமார சமரத்னவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம் என சுட்டிக்காட்டினர்.

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அவரது பாதுகாப்பிற்காக கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது முக்கியமானது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், மரணத்திற்கான காரணத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பை அறிவித்தார்.பதிவு செய்ய இறப்பு சான்றிதழை வழங்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை மார்ச் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version