மெர்வின் சில்வா கைது தொடர்பில் மனைவி தகவல்

#image_title

மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இன்னும் எனக்கொரு தெளிவு இல்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (05) கைது செய்யப்பட்டார்.

மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் களனி பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்று, அவரால் போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விபரங்கள் எனக்கு தெரியாது எனவும் மெர்வின் சில்வாவின் மனைவி கூறியுள்ளார். நாங்கள் வீட்டில் இருந்த போது, அடையாள அட்டையை காட்டிய 4 பேர் அவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version