பூந்தொட்டிகளை மிதித்ததற்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பொல்துவ சந்தியில் நடைபெற்ற போராட்டத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
பிரதமர் ஹரிணி மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி எனக்கு நினைவிருக்கிறது.
பொல்துவவில் நடந்த போராட்டத்தின் போது இங்குள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எங்களது பெண் உறுப்பினர்களுக்கு நீர்த்தாரை மூலம் தாக்கப்பட்டனர்.
தண்ணீரால் தாக்கப்பட்ட பிறகு அன்று நான் நாடாளுமன்றத்திற்கு வந்தேன், பூந்தொட்டிகளை மிதித்ததற்காக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு இன்னும் விசாரிக்கப்படுகிறது. நான் பிரதமராக இருக்கும் போது கூட, அதற்கு நான் பொறுப்புக் கூற வேண்டியிருந்தது, அந்தப் போராட்டங்கள் மூலம்தான் நாங்கள் இங்கு வந்தோம்.” என்றார்.