பெற்றோல் லீற்றரிலும் அநுரகுமார திசாநாயக்க 120 ரூபா பெற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். டீசல் லீற்றரிலும் பிரதமர் ஹரினி அமரசூரிய 90 ரூபா பெற்றுக்கொள்வதாக மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொகையில் ஒரு பகுதியை மக்களுக்கு வழங்குமாறு கோருவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு முடியாது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். எமது ஆட்சியில் லீற்றர் ஒன்று 95 ரூபா செலுத்தியவர்கள் தற்பொழுது 280 ரூபாவிற்கு டீசல் விற்பனை செய்து கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஸ்திரதப்படுத்தியது தாங்களே என அவர்கள் கூறுகின்றார்கள். தேர்தல் மேடைகளில் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஹரினி அமரசூரிய சத்தியம் செய்தது போன்று செய்திருந்தால் இன்று வரிசை யுகம் உருவாகியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியாளர்களும் ரணில் விக்ரமசிங்க செய்ததையே செய்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வெட்டிப் பேச்சு பேசுவோரினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.