உலகம்

ட்ரம்பின் நாடுகடத்தல் அழுத்தம்: பேச்சுவார்தைக்கு தயாராகும் நாடு

டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்திற்கு மத்தியில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ அந்நாட்டிற்கான அமெரிக்க தூதரை சந்திக்கவுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது. வெனிசுலாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவும் வெனிசுலாவும் உடைந்த இராஜதந்திர உறவுகள் குறித்து வெவ்வேறான நிலைப்பாடுகளை கொண்டமைந்துள்ள நாடுகளாக பார்க்கப்படுகின்றன. இரு நாடுகளும் தடைகள், குற்றச் செயல்கள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சதி குற்றச்சாட்டுகளால் முறனான போக்கை கையாண்டு வருகின்றன. குறித்த இரு தரப்பு சந்திப்பில், வெனிசுலாவிற்கான அமெரிக்காவின் நாடுகடத்தல் விமானங்கள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் தனது “பெரும் எண்ணிக்கையிலான நாடுகடத்தல்” திட்டத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவிலிருந்து எவரையும், திரும்பப் பெறபோவதில்லை என தென் அமெரிக்க நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. காரணமாக இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து சர்வதேசம் உற்றுநோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *