இலங்கை

பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! 

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தெரிவித்துள்ளார். நேர்காணலின் போதே குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. செய்தியைக் கேட்டு தந்தை  மனவருத்தம் அடைந்தார். தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது.

பிரபாகரனின் இளைய மகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல. தவறுதலாக(க்ரோஸ் பயரிங்) நடந்தது. பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல.  தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தெரியவந்தது. போர் காலத்தின் போது தந்தை மனம் வருந்திய சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *