இலங்கை

யாழில் காதலர் தினத்தை மறுத்த காதலி : இளைஞர் விபரீத முடிவு

யாழில் (Jaffna) காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் கிளிநொச்சியை (Kilinochchi) சேர்ந்த இளைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் (13.02.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிய வருகையில், காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல குறித்த இளைஞர் அழைத்துள்ளார். காதலி மறுப்பு தெரிவித்ததன் காரணமாக இளைஞர் கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தர்மபுரம் காவல்துறையினர் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *