இலங்கை

ஊடகங்களால் கவனிக்கப்படும் வடக்கின் செயற்பாடுகள்!

செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் (Nagalingam Vedanayagam) தெரிவித்துள்ளார்.

கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்குப் பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியும் வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தனது உரையில், வடக்கு அதிகாரிகள் கோரிய நிதியையே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்யவேண்டும்.

விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நிதியைத் திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெருமளவு நிதி எமக்கு கிடைக்கப்பெறும் நிலையில் அதை உரிய முறையில் செலவு செய்யவேண்டும்.
செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன” என்றார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *