இலங்கை

இலங்கை உட்பட 102 நாடுகளுக்கு நன்கொடை!

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. பேரீச்சம்பழங்கள், மன்னர் சல்மானின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் பகுதியாகும்.

எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன் பேரீச்சம்பழங்கள் அதிகமாக வழங்கப்பட உள்ளது.

நனகொடைத் திட்டமானது உலகளாவிய முஸ்லிம் சமுதாயத்திற்கான சவூதி அரேபியாவின் ஆதரவையும் உதவியையும் வலுப்படுத்துகிறது. விநியோகத்தை, சவூதி தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இஸ்லாமிய அலுவல்கள், பிரசாரம் மற்றும் வழிகாட்டல் அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது.

பொருத்தமான நேரத்தில் மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு பேரீச்சம்பழங்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடை, ரமழான் காலத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு உதவுவதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சவூதியில் இருந்து, இலங்கைக்கும் சமீபத்தில் 50 தொன் உயர்ரக சவூதி பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான உறவினை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் முஸ்லிம் சமுதாயத்திற்கு சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் சான்றாகக் அமைகிறது என கூறப்பட்டுள்ளது. அந்நாட்டு அமைச்சர் ஷேக் அப்துல்லதீப் பின் அப்துல் அஸீஸ் அல்-ஷேக், உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு உதவுவதில் சவூதி தலைமைகள் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திட்டம் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விழுமியங்களை பரப்புவதை, சமாதானத்தை ஊக்குவிப்பதை மற்றும் தீவிரவாதத்தையும் மதத்தீவிரவாதத்தையும் எதிர்க்க உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *