இலங்கை

கிழக்கிலங்கையில் துப்பாக்கிச்சூடு

தெஹியத்தகண்டிய பகுதியில் தனியார் பண்ணை ஒன்றில், துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வீரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று (22) இடம்பெற்றதாகவும், காயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்பாக தெஹியத்தகண்டிய பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *