இலங்கை

திசைகாட்டி அரசாங்கம் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு: அதிர்ச்சியளித்த ஆய்வின் முடிவு

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தேர்தலுக்கு பின் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 24 வீதமாக காணப்பட்ட அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது 62 வீதமாக அதிகரித்துள்ளது. “நாடு எண்ணும் விதம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் புதிய பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு(2024) பெப்ரவரி மாதத்தில் 7 வீதமாக காணப்பட்டதாகவும் இவ்வாண்டின்(2025) அது 62 வீமதாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக எடுத்துக்கொள்ள முடியும் எனவும் வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதல் முறையாக, பெரும்பான்மையான மக்கள், அதாவது 55 வீதமானோர் , இலங்கையின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதாக நம்புவதாக வெரிட் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையில் இருப்பதாக 47 வீத மக்கள் நம்புவதாக வெரிட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *