நாகப்பட்டினம் (Nagapattinam)– காங்கேசன்துறை (kankesanthurai) கப்பல் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல் சேவை, கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் மழை மற்றும் வானிலையைக் கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், (26) நாளை (28) வரை கப்பல் போக்குவரத்து இடை நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் முதலாம் திகதி நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை வழக்கம் போல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.