இலங்கை

இஷாரா தங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் தேடப்பட்டு வரும் செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18.02.2025) கடுவெலயில் ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புகைப்படங்கள், சிசிரிவி காணொளிகள் வெளியாகி உள்ளன.

கொலை நடந்ததற்கு முந்தைய நாள் (18) மாலையில் காரில் ஹோட்டலுக்கு வந்ததாகவும், வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும், மறுநாள் மஹரகம பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறியதாகவும் பொலிஸ் தெரிவிக்கின்றன.

மற்றொரு காரில் வந்த ஒருவர் ஹோட்டல் முன் வந்து அந்தப் பெண்ணிடம் ஒரு பையைக் கொடுத்ததாகவும்,துப்பாக்கி அடங்கிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறித்த புத்தகம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *