உலகம்

கனடாவின் டொராண்டோ நகரில் துப்பாக்கிச்சூடு

கனடாவின் டொராண்டோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

சம்பவத்தில் 20 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே காயமடைந்ததாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனேடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *