தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் அநுர குமார திசாநாயக்கவினால்(Anura Kumara Dissanayake) இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. மின்சார வாகனங்கள், விசேட வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.