இலங்கை

வெளிநாடு பறக்கிறார் அநுர

ஜனாதிபதி (anura kumarra dissanayake) பெப்ரவரி 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு(uae) அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். விஜயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் நடைபெறவுள்ளது. பயணத்தின் போது, ஜனாதிபதி துபாயில்(dubai) நடைபெறும் உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றுவார்.

அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதியுடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கி இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்துவார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார்.

மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும்  இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மேற்கொள்ளப்படும் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *