இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகள் பயணங்களுக்காக செலவிட்ட அதிக பணம்

மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்திற்காக 50 மில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் (20) உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.

சிறிசேன இந்த சுற்றுப்பயணத்தில் 77 பேரை அழைத்துச் சென்றார், இதில் அப்போதைய முதல் பெண்மணி உட்பட மொத்தம் ஒன்பது அமைச்சர்கள் அடங்கியிருந்தனர். அதிகாரப்பூர்வ குழுவில் 28 உறுப்பினர்கள், இரண்டு நெறிமுறை அதிகாரிகள், 13 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 28 ஊடக பணியாளர்களும் இருந்தனர்.

சுற்றுப்பயணத்தின் மொத்த செலவு 50.4 மில்லியன் ரூபாய்கள்; என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக 72 உறுப்பினர்களை அழைத்துச் சென்றார்.இதன் மொத்த செலவு 9.5 மில்லியன் ரூபாய்கள் ஆகும். அதிகாரப்பூர்வ குழுவில் 12 பேர் இருந்தனர், மேலும் 11 பேர் அதிகாரப்பூர்வ குழுவிலிருந்து தனித்தனியாக சென்றனர்.

ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து ஊடக பணியாளர்கள் இதில் அடங்கியிருந்தனர். இதனை தவிர, இரண்டு தனித்தனி பாதுகாப்புப் படைகள் ஆகியவை சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணிக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஒரு சில மட்டுமே என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *