ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி (Harini Amarasuriya) வெளியிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் (27.02.2025) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவித்த பிரதமர் முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.
மகிந்த (Mahinda Rajapaksa) 2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன்
மைத்திரிபால (Maithripala Sirisena) – 2015 முதல் 2019 வரை 384 மில்லியன்
கோட்டாபய (Gotabaya Rajapaksa) – 2020 முதல் 2022 வரை 126 மில்லியன்
ரணில் (Ranil Wickremesinghe) – 2023 மற்றும் 2024 க்கு இடையில் 533 மில்லியன் என தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் பயன்படுத்தியதாகவும் 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மகிந்த ராஜபக்சவால் 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டது எனவும் ரூ. 1,144 மில்லியன் என்று குறிப்பிட்டுள்ளார்.