உலகம்

176 பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்

தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் 176 பயணிகளுடன் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவின் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஹாங்காங்கிற்கு, 169 பயணிகள் ஏழு பணியாளர்களுடன் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புறப்படுவதற்கு சற்று நிமிடத்திற்கு முன்பு, விமானம் தீப்பிடித்துள்ளது. விமானத்திலிருந்து 176 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் மூன்று பேருக்கும் மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *