உலகம்

தடையை மீறி ரஷ்ய எரிவாயுவை வாங்கும் ஜேர்மனி

தடை செய்யப்பட்ட ரஷ்ய பெட்ரோலில் இயங்கும் கனேடிய வாகனங்கள், இது எப்படி சாத்தியம் என்னும் செய்தியை சமீபத்தில் படித்திருக்கலாம். ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது. கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யாவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

பல மில்லியன் டொலர்கள் மதிப்புடைய, தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் கனடாவில் புழங்குவதாக ஒரு செய்தி வெளியானது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இந்தியா துருக்கி போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தடையும் கிடையாது. ஆகவே, அந்த எரிபொருட்களை வாங்குவது ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையை மீறும் செயலும் அல்ல என்பதால், ரஷ்ய எண்ணெய் மறைமுகமாக கனடாவுக்குள் நுழைகிறது.

ஜேர்மனியும், தடையை மீறி, மறைமுகமாக ரஷ்ய எரிவாயுவை வாங்குவதாக, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் உக்ரைனை மையமாகக் கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளிலுள்ள சில நிறுவனங்கள் ரஷ்ய எரிவாயுவை வாங்குகின்றன.
அந்த நிறுவனங்களிடமிருந்து ஜேர்மனி பெருமளவில் எரிவாயுவை இறக்குமதி செய்கின்றது. ஜேர்மன் அரசால் கட்டுப்படுத்தப்படும் ஆற்றல் நிறுவனம் ஒன்று, 2024ஆம் ஆண்டில் மட்டும், பிரான்சிலுள்ள ஒரு நிறுவனம் மூலமாக 58 டேங்கர் எரிவாயுவை வாங்கியுள்ளது.

பிரான்ஸ் நிறுவனம் மூலம் 2023ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து ஜேர்மனி வாங்கிய எரிவாயுவைவிட ஆறு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *