இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளத் தொகை தொடர்பில் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 325 பில்லியன் ரூபா தொகை செலவிடும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், வங்குரோத்து நிலைக்குச் சென்ற நாடொன்று, மீண்டு தாக்கல் செய்யும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். இந்த அளவுக்கு அரச சேவையில் சம்பள உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  2025 ஆம் ஆண்டில் 102 பில்லியன் ரூபாவும், 2026 ஆம் ஆண்டில் 128 பில்லியன் ரூபாவும், 2027 ஆம் ஆண்டில் 95 பில்லியன் ரூபாவும் செலவிடப்படும்.

சம்பள அதிகரிப்புக்காக மொத்தம் 325 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடப்படும்  என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *